மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு...
இன்று பெரும்பாலானவர்களின் முக்கியமான ஒரு பிரச்சனை எதுவென்றால் மூட்டு வலிதான். அதுவும் நாற்பது வயது வந்துவிட்டது என்றால் சொல்லவே வேண்டாம். சர்க்கரை, பிரஷர் மூட்டுவலி என வரிசையாக வந்துவிடும்.
மருத்துவர்களை நம்பி போனால் ஆளுக்கு ஒரு ஆபரேஷன் செய்ய சொல்கிறார்கள். சரி ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடுமா என்று கேட்டால் அதற்கும் மருத்துவர்களிடம் சரியான பதில் இல்லை
என்ன செய்வது இப்படி மூட்டு முழங்கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, எலும்பு தேய்மானம் ,ஜவ்வு விலகல், ஜவ்வு தேய்மானம், விபத்தினால் ஏற்பட்ட எலும்பு பிரச்சனைகள் என அடுக்கி கொண்டே போகும் அணைத்து எலும்பு சம்பந்தமான நோய்களுக்கும் ஒரே தீர்வு வாத வள்ளி கிழங்கு தான்.இது என்ன வாத வள்ளி கிழங்கு.
காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை கற்ப மூலி என்றும் வாத வள்ளி கிழங்கு என்றும் கூறியுள்ளார் இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து.
கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements.
உடல் புத்துணர்ச்சி என்பது மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் தான் என்பதை அறிவோம் இந்த கிழங்கு சாப்பிடும் காலங்களில் கோபமோ மனசஞ்சலமோ சிறிதும் வரவே வராது.
உடல்,மனம்,புத்தி புத்துணர்ச்சி அடைவது என்பது உடலில் உள்ள உள்ளுறுப்புககளுக்கு உண்டான நுண் சத்துக்கள் கிடைக்க பெறும் போது நடைபெறும் ஓர் நிகழ்வு வாத வள்ளி கிழங்கில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக அமைகின்றன
.
மேலும் இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு .குழந்தைக்கு ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.
வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம்.இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி
அற்புத வாத வள்ளி கிழங்கு
