ஆழ் துளைக் கிணற்றில் தவறுதலாக விழுந்த சுர்ஜித் நான்கு நாட்கள் கடந்த நிலையில இன்று அதிகாலை மீட்டதாகவும் அவன் இறந்து விட்டதாகவும் இந்தியா தமிழக அரசு இன்று அதிகாலை உத்தியோக ரீதியாக அறிவித்தது. சுர்ஜித் சிறுவனை இறந்த நிலையில் மீட்டதாக கூறுவதில் பல மர்மங்கள் உள்ளது. அர்த்த ராத்திரியில் மீட்டதாக கூறுகின்றனர். அவர்கள் எவ்வாறு மீட்டனர் என்பது தொடர்பாக மர்மமாக உள்ளது. சுர்ஜித் விழுந்ததாக உள்ள ஆழ் துளைக் கிணற்றுக்கு அருகில் இயந்திரங்கள் மூலம் 50 அடிதான் தோண்டப்பட்டது. அப்படி எனில் சுர்ஜித் 80 அடி ஆழ் துளைக் கிணற்றில் சிக்கி இருந்ததாக முதலே கூறினார்கள். எனவே இவனை எப்படி வெளியே எடுத்தார்கள் என்று இவர்கள் தெளிவாக கூறவில்லை. அத்துடன் வெளியே எடுத்த சிறுவனின் உடலத்தை யாராவது பார்த்தார்களா இல்லை. அனைத்து நாடகங்களையும் கச்சிதமாக அர்த்த ராத்திரியில் முடித்தனர். அவன் விழுந்த ஆழ் துளைக் கிணற்றை கொங்றீட் மூலம் இரவே மூடி விட்டனர். இறுதியில் எந்த தடயமும் இருக்கக் கூடாது என்பதற்காக கிணற்றை கான்கிரீட் கொண்டு மூடி விட்டார்கள் எனது ஊகத்தின் படி சிறுவன் உடல் கிணற்றிலே இருக்கவேண்டும்.
அவனை மீட்ட போது ஏன் வீடியோ பதிவிடவில்லை அது கூட பலத்த சந்தேகத்தை உருவாக்கிறது. அவனை உயிரோடோ அல்லது இறந்த நிலையில் மீட்டாலோ அவர்கள் மீட்ட சாகசா வீடியோவை கட்டாயம் இவர்கள் வெளியிட்டு இருப்பார்கள். அவன் உடம்பை ஒன்றில் வெளியே எடுக்கவில்லை அல்லது அவன் சாகும் வரை காத்திருந்து விட்டு அதே ஆழ் துளைக் கிணற்றின் மேல் வாயிலாக அவனது உடம்பை இவர்களாக சிதைவடையச் செய்து சிதைவடைந்த வண்ணம் வெளியே எடுப்பதற்கு போட்ட திட்டமாக கூட இருக்கலாம்.
நான்கு நாட்களாக இயந்திரங்கள் வருவதும் அது பழுதாப்படுவதும் மீட்பு பணி தடைப்படுவதும் அது சீராக்கப்படுவதும் என சின்னப் பிள்ளைத்தனமாக சொல்லிக் கொண்டு சிறுவனின் உயிருடன் இந்தியா விளையாடிக் கொண்டது. சவப்பெட்டிக்குள் இருப்பது சுர்ஜித்தின் உடல் அல்ல ஒன்றில் அவனது உடல் பாகங்கள் இருக்கலாம் அல்லது அது கூட இல்லாமல இருக்கலாம். எப்படி சிதைவடைந்தாலும் அவன் பெற்றெடுத்த தாய்க்கே அவன் முகத்தை ஒரு நிமிடம் காட்டியிருக்கலாம் ஆனால் காட்டவில்லை இந்தியா மக்கள் மட்டும் அல்ல இலங்கை மக்கள் உலக மக்கள் கூட சுர்ஜீத் மீண்டு வர வேணும் என்று பிராத்தித்தனர்.. இந்த வருட தீபாவளியை கூட உணர்வு ரீதியாக கொண்டாட முடியாது இவனது துன்பியல் நிகழ்வு அமைந்தது.. அப்படி ஒட்டு மொத்த மனிதர்களின் உணர்வை இந்தியா கொல்லி வைத்தது. என்னமோ ஏதோ சிறுவனை மீட்க முடியாத கையலாகதனத்தை மூடி மறைக்க நடந்த சதியோ அல்லது அரசியலின் சதியோ சுர்ஜித்தின் இறப்பு.


