ஏப்ரல் 29 முதல் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவை தொடங்கப்படுகிறது.
நான்கு மணி நேர பயணம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த முன்மொழியப்பட்ட பயணிகள் போக்குவரத்து திட்டம் இரு நாட்டு குடிமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயணிகள் படகு சேவை ஏப்ரல் 29 முதல் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்தப் படகுச் சேவையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல நான்கு மணி நேரம் ஆகும்.
